கிருஷ்ணர் காப்பாற்றவில்லை!

Viduthalai
1 Min Read

கீர்த்தனை பாடிக்கொண்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இஸ்கான் அமைப்பினர் 6 பேர் மரணம்

இந்தியா

அனந்தபூர், அக்.31 ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்திரியில் இஸ்கான் அமைப்பின் சார்பில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்டு ஆடிப்பாடிய இஸ்கான் அமைப்பினர் நிகழ்ச்சியை முடித்துகொண்டு, அனந்தப்பூர் நகரத்தின் பெரு நிறுவனம் ஒன்றிலிருந்து பஜனைபாட அழைத்துள்ளனர்.

இதனை அடுத்து காரில் அனந்தபுரம் நோக்கி சென்றபோது ஷிங்கனமாலா மண்டலம், நயனப்பள்ளியில் அவர்கள் சென்ற கார், கட்டுபாட்டை இழந்து லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் லாரியில் அடியில் கார் சிக்கி அதில் பயணம் செய்த 6 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரி ழந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறை யினர், உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *