கிருஷ்ணர் காப்பாற்றவில்லை!

1 Min Read

கீர்த்தனை பாடிக்கொண்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இஸ்கான் அமைப்பினர் 6 பேர் மரணம்

இந்தியா

அனந்தபூர், அக்.31 ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்திரியில் இஸ்கான் அமைப்பின் சார்பில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்டு ஆடிப்பாடிய இஸ்கான் அமைப்பினர் நிகழ்ச்சியை முடித்துகொண்டு, அனந்தப்பூர் நகரத்தின் பெரு நிறுவனம் ஒன்றிலிருந்து பஜனைபாட அழைத்துள்ளனர்.

இதனை அடுத்து காரில் அனந்தபுரம் நோக்கி சென்றபோது ஷிங்கனமாலா மண்டலம், நயனப்பள்ளியில் அவர்கள் சென்ற கார், கட்டுபாட்டை இழந்து லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் லாரியில் அடியில் கார் சிக்கி அதில் பயணம் செய்த 6 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரி ழந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறை யினர், உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *