அலகாபாத், அக். 30- உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப் கரில் உள்ள மாபேளா தேவி ரயில் நிலையத்தில் நேற்று (29.10.2024) பயணிகளை ஏற்ற நடைமேடைக்குச் கொண்டு சென்ற ரயிலில் 3 காலிப் பெட்டிகள் தடம் புரண்டது.
இதனால் டில்லி – பாட்னா வழித்தடத்தில் பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தடம் புரண்ட ரயில் பெட்டிகள் முக்கிய பாதையில் நின்றுவிட்டதால் தீபாவளிக்காக சொந்த ஊருக்குப் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். நாள்தோறும் தொடர் கதையாக விபத்துகள் நடந்த போதும் ரயில்வே அமைச்சர் எக்ஸ் தளத்திலும் முகநூலிலும் ‘ரீல்’ எனப்படும் பொழுதுபோக்கு காணொலிகளைப் பதிர்வதிலேயே மும்முரமாக இருக்கிறார்.