ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் பா.ஜ.வுக்குக் கடினம் தான்!

Viduthalai
1 Min Read

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா கவலை

ராஞ்சி, அக்.29- ஜார்க்கண்ட் மாநில சட்ட மன்றத்திற்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் தேர்தலுக்கான பாஜ இணை பொறுப்பாளரும் அசாம் முதலமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா 27.10.2024 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன்.

அதனால், அசாம் இடைதேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை.இடைதேர்தல் பிரச்சாரத்துக்கு என்னால் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், ஒன்று அல்லது 2 இடங்களில் பிரச்சாரம் செய்வேன்’’ என்றார். ஜார்க்கண்டில் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்ட போது,ஜார்க்கண்ட் பாஜவை பொறுத்த வரை கடினமான மாநிலம் ஆகும். ஆனால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *