ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் பா.ஜ.வுக்குக் கடினம் தான்!

1 Min Read

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா கவலை

ராஞ்சி, அக்.29- ஜார்க்கண்ட் மாநில சட்ட மன்றத்திற்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் தேர்தலுக்கான பாஜ இணை பொறுப்பாளரும் அசாம் முதலமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா 27.10.2024 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன்.

அதனால், அசாம் இடைதேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை.இடைதேர்தல் பிரச்சாரத்துக்கு என்னால் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், ஒன்று அல்லது 2 இடங்களில் பிரச்சாரம் செய்வேன்’’ என்றார். ஜார்க்கண்டில் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்ட போது,ஜார்க்கண்ட் பாஜவை பொறுத்த வரை கடினமான மாநிலம் ஆகும். ஆனால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *