நினைவில் கொள்ளுங்கள் இதுதான் மதவெறி ஆட்சி

1 Min Read

மாட்டிறைச்சி உண்டதாகப் பொய்கூறி கொலை செய்யப்பட்ட இளைஞர்

சண்டிகர், அக்.29- பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் சர்க்கி தாத்ரி பகுதியில் 27.8.2024 அன்று மாட்டிறைச்சி உண்டதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞரும், புலம்பெயர் தொழிலாளியுமான சபீராவை (26) ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹிந்துத்துவா குண்டர்கள் அடித்துக் கொன்றனர்.
இந்த படுகொலை தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். “சபீராவின் படுகொலை கெட்ட வாய்ப்பானதுதான். எனினும் பசு பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை” என அரியானாவின் பாஜக முதலமைச்சர் நயாப் சிங் சைனி அப்போது ஆணவத்துடன் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், “ஹிந்துத்துவா குண்டர்களால் அடித்துக் கொல்லப் பட்ட முஸ்லிம் இளைஞர் சபீரா வீட்டில் இருந்தது மாட்டிறைச்சி அல்ல” என சார்க்கி தாத்ரி மாவட்ட காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் பாரத் பூஷன் தடவியல் விசாரணையை சுட்டிகாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில், “பசு காவலர்கள் எனப்படும் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் சபீரா, குப்பையிலிருந்து இரும்புக் கழிவுகளை சேகரிக்கும் தொழிலைச் செய்து வந்தவர். அவர் தனது வீட்டில் மாட்டிறைச்சி சாப்பிட வில்லை. மேலும் சபீராவின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மாட்டிறைச்சி இருந்ததற்கான தடயவி யல் ஆதாரம் எதுவும் இல்லை. அத னால் சபீரா வேண்டுமென்றே அடித் துக் கொல்லப்பட்டுள்ளது நிரூபண மாகியுள்ளது” என அவர் கூறியுள்ளார்.
அரியானா காவல்துறையினரின் அறிக்கையைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநில பாஜக அரசுக்கு கண்டனம் தெரி வித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *