சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் காட்சிப் பதிவு வைரல்!

Viduthalai
1 Min Read

புதுடில்லி, அக்.27 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சிகையலங்காரக் கடையில் சவரம் செய்யும்போது கடைக்காரரான அஜித்து டன் உரையாடல் குறித்த காட்சிப் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந் துள்ளார்.

அப்பதிவில் “நாள் முழுவதும் உழைத்தாலும், நாளின் இறுதியில் சேமிக் கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை’’ என்று ராகு லிடம் அஜித் வருத்தத்துடன் தெரிவித் துள்ளார்.ராகுல் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “அஜித் கூறிய `எதுவும் மிச்சமில்லை’ என்ற வார்த்தைகளும், அவரது நம்பிக்கைகளும் இந்தியாவில் உழைக்கும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத் தினரின் நிலைமையை எடுத்துரைக்கின்றன.முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், குயவர்கள், தச்சர்கள் வரையிலான தொழிலாளர்களின் கடை, வீடு மற்றும் சுயமரியாதையை, இந்தியாவின் வீழ்ச்சியடைந்த வருமானம் மற்றும் பண வீக்க அதிகரிப்புதான் கொள்ளை யடித்துள்ளன.

தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் குடும்பங்களுக்கு சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் புதிய திட்டங்களும் நவீன தீர்வுகளும்தான் இன்று தேவை’’ என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *