2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தி.மு.க. தொகுதி பார்வையாளர்களுடன் அக்.28-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

1 Min Read

சென்னை, அக். 26– 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக தி.மு.க. தொகுதி பார்வையாளர்களுடன் அக்.28இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தொகுதி பார்வையாளர்களை நியமித்து தி.மு.க. தலைமைக் கழகம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்; திமுக தலைவர் தலைமையில், 2026-சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள “சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்” வருகிற 28ஆம் தேதி காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *