இதுதான் கடவுள் சக்தியோ? அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய பக்தர்கள் ஆறு பேர் பலி

1 Min Read

நாசிக், ஜூலை 30 – இரண்டு தனியார் பேருந்துகள் மோதிய பயங்கர விபத்தில் “அமர்நாத் யாத்திரை” சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். 

ஹிங்கோலியை சேர்ந்த பக்தர்கள் குழு அமர்நாத் யாத்திரை சென்று விட்டு தனியார் பேருந்தில் திரும்பினர். இந்த பேருந்து நேற்று (29.7.2023) அதிகாலை 2.30 மணியளவில் புல்தானா மாவட்டம் மல்காப்பூர் நகரில் உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்தது. எதிர்திசையில் நாசிக் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றது. அப்போது லாரியை முந்த முயன்ற இந்த பேருந்தும், அமர்நாத் யாத்திரை பயணிகள் பேருந்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த பயங்கர விபத்தில் 2 பேருந்துகளும் பலத்த சேதம் அடைந்தன. குறிப்பாக பக்தர்கள் வந்த பேருந்து சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் அமர்நாத் யாத்திரை பேருந்தில் பயணித்த பக்தர்கள் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 3 பெண்கள் அடங்குவர். மேலும் பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *