கருநாடகத்தில் பிஜேபி பிரமுகர் காங்கிரஸில் இணைந்தார்

viduthalai
1 Min Read

பெங்களூரு, அக். 24- கருநாடக சட்டமன்றத்தில் சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த 3 தொகுதி களுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனுத்தாக்கல் செய்ய நாளை (25.10.2024) கடைசி நாள் ஆகும். பா.ஜனதா கூட்டணியில் உள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு சென்னபட்டணா தொகுதி ஒதுக்கப்பட்டது. மற்ற 2 தொகுதிகளுக்கும் பா.ஜனதா வேட்பாளர் களை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் கருநாடக அரசியலில் திடீர் திருப்பமாக சென்னபட்டணா தொகுதி தனக்கு ஒதுக்கப்படாததால் அதிருப்தியடைந்த பா.ஜனதா முக்கிய பிர முகர் யோகேஷ்வர் கருநாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் முன்னிலை யில் காங்கிரசில் இணைந்தார். காங்கிரசில் இணைந்த யோகேஷ்வர் அக்கட்சி சார்பில் சென் னப்பட்டணாவில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *