டில்லியில் நவ.6 இல் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

Viduthalai
1 Min Read

புதுடில்லி, அக்.24 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கருநாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்பு டைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 34 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது.

இந்நிலையில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி 35 ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு டில்லியில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடை பெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நீர் பங்கீடு தொடர்பாக கூட்டத்தில் விவா திக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *