காவி நிறத்துடன் பி.எஸ்.என்.எல். புது லோகோ அறிமுகப்படுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சேனல் லோகோவை தொடர்ந்து தற்போது பி.எஸ்.என்.எல். லோகோவும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளதாகவும், பாஜக கொடியின் நிறமே எங்கும் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புவதாகவும் சாடி, பொதுத் துறை நிறுவனங்களுக்கு காவி அடிப்பதை பாஜக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.