எச்சரிக்கை! புது வகை இணைய வழி மோசடி!

Viduthalai
2 Min Read

புதுடில்லி. அக். 23- உத்தரப் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ‘இணையவழி கைது’ எனும் இணைய வழி மோசடியால் ரூ. 60 லட்சத்தை இழந்துள்ளார்.

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ எனும் இணைய வழி (ஆன்லைன்) பண மோசடி அதிகரித்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் காஜியா பாத்தைச் சேர்ந்த இந்திய உணவுக் கழகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி ப்ரீதம் சிங்கை சுமார் 6 நாள்கள் ‘டிஜிட்டல் காவலில்’ வைத்து ரூ. 60 லட்சம் பணம் பறித்துள்ளனர்.

அக்டோபர் 10ஆம் தேதி தங்களை டில்லியின் சைபர் குற்றப் பிரிவு அதிகாரிகள் என்று கூறி ப்ரீதம் சிங்கை காணொலிக் காட்சி அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். ப்ரீதம் சிங், குழந்தைக் கடத்தலில் ஈடுபட்ட தாகவும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 68 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அதில் ரூ. 68 லட்சம் குழந்தைக் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் பொய்க் குற்றச்சாட்டு கூறி ‘டிஜிட்டல் காவல்’ என்று இணைய வழியில் இருக்க வைத்துள்ளனர்.

இந்த வழக்கு பற்றி யாருடனும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியது டன், விசாரணை என்ற பெயரில் தொடர்பை துண்டிக்கக்கூடாது என 6 நாள்கள் இணைய வழியில் இருக்க வைத்துள்ளனர்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் பணம் தரக் கோரியுள்ளனர். அதன்படி, ரூ. 60 லட்சத்தை பல வங்கிக் கணக்கு களுக்கு பணப் பரிமாற்றம் செய்ய வைத்துள்ளனர். இதையடுத்து இணைய வழியில் அழைப்பு துண் டிக்கப்பட்டது.

இதன்பின்னர் மேலும் ரூ. 50 லட்சம் கேட்கவே பணம் திரட்ட முடியாமல், சந்தேகத்தின்பேரில் ப்ரீதம் சிங் புகார் அளிக்க முடிவு செய்து சைபர் குற்றப் பிரிவில் புகாரளித்தார்.

இவர்கள் போலி அதிகாரிகள் என்று காவல் துறையினர் உறுதி செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ப்ரீதம் சிங் மீது சிபிஅய் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய் துள்ளதால் அந்த குற்றத்தைப் பயன்படுத்தி அவரை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

உங்களுக்கும் இதுபோன்ற காணொலி அழைப்பு வந்தால் உடனடியாக அழைப்பை துண்டித்து விட்டு சைபர் குற்றப்பிரிவில் 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்குமாறு சைபர் காவல் துறைத் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *