மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

1 Min Read

மேட்டூர், ஜூலை 31- மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பாசனத்திற் கான தண்ணீர் தேவை அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 26ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர் திறப்பானது நேற்று (30.7.2023) மாலை முதல் வினாடிக்கு 14 ஆயி ரம் கன அடியாக அதிகரிக்கப்பட் டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து படிப்படி யாக குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப் பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.60 அடி யாக இருந்தது. அணைக்கு வினா டிக்கு 11 ஆயிரத்து 342 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *