தி.மு.க. கூட்டணியில் குழப்பமா? சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பதிலடி

1 Min Read

திருச்சி, அக். 23- திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
கட்சியின் நூற்றாண்டு ஆசிரியர் பயிலரங்கம் திருச் சியில் நேற்று (22.10.2024) நடை பெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலை வகித்தார். தேசியச் செயலாளர் நாராயணா, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, பயிலரங்கை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. கூட்டணியில் இருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேறி விடுவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியிருப்பது, அவரது விருப்பம். தற்போது அதிமுக எரிந்துகொண்டிருக்கிறது, அதை அணைப்பதற்கு பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும். திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகவும், ஒற்றுமையுடனும் இருக்கிறோம். இந்த அணி தொடரும்.

பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். நடவடிக்கை எடுத்தால், திமுக அரசு அராஜக அரசுஎன்கிறார்கள். எல்லா பிரச்சினைகளிலும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *