முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (21.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முரசொலி செல்வம் அவர்களின் படத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இந்து குழுமத்தின் இயக்குநர்
என். ராம், திரைக் கலைஞர் சத்யராஜ், பேராசிரியர் மு.நாகநாதன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.