ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி நியமனமாம்!

viduthalai
1 Min Read

புதுடில்லி, அக். 22- ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறநிலையில், அதை ஈடு செய்ய 25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத்துள்ளது.

இந்த இடங்களுக்கு, ஏற்கெனவே ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்ட நபர்களையும் மறுநியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரயில்வேயில் ஓய்வு பெற்ற 65 வயதுக்குட்பட்டவர்கள், சூப்பர்வைசர் முதல் டிராக் மேன் வரையில் பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

உடல் தகுதி

அவர்களின் கடைசி அய்ந்து ஆண்டுகால பணி நடத்தை அலசப்பட்டு, அவர்களின் உடற் தகுதியைப் பொறுத்து வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். 2ஆண்டுகள் வரையில் அந்த வேலையில் தற் காலிக ஊழியர்களாக பணி யாற்ற முடியும். அவர்களின் செயல்பாடு களைப் பொறுத்து பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

மறு நியமனம் செய்யப்படுபவர் களுக்கு, அடிப்படை ஓய்வூதிய தொகை மட்டும் கழிக்கப்பட்டு அவர்கள் இறுதியாக பெற்ற மாத ஊதியம் வழங்கப்படும். பயணப்படி வழங்கப்படும்.

ஆனால், ஊதிய உயர்வு வழங்கப்படாது என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஊழி யர்களை மறுநியமனம் செய்யும் செயல்பாடுகளை மண்டல மேலா ளர்கள் மேற்கொள்வர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறை

சமீபமாக ரயில்வே விபத்துகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. ஊழியர்கள் பற்றாக்குறையும் இந்த விபத்துகள் நடைபெறுவதற்கான காரனங்களில் ஒன்று என்று கூறப் பட்டு வருகிற நிலையில், ரயில்வே துறை, அனைத்து மண்டலங்களிலும் தேவையான இடங்களுக்கு ஆட் களை நியமனம் செய்யும் முன் னெடுப்பை தொடங்கியுள்ளது.

இளைஞர்கள் வேலைவாய்ப் பின்றி திணறிவரும் நிலையில், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் மறுநியமனம் செய்வது மோச மான முன்னெடுப்பு என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *