செய்தியும், சிந்தனையும்…!

1 Min Read
அய்யப்பன் சக்திமீது
நம்பிக்கை இல்லையா?
* சபரிமலை பக்தர்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் செய்யப்படும்.
– கேரள அமைச்சர் வீனாஜார்ஜ்
>>  ஏன், அய்யப்பன் சக்திமீது நம்பிக்கை இல்லையா?
‘‘கடவுளை மற–மனிதனை நினை!”
–தந்தை பெரியார்
இதன்மூலம் விளங்கவில்லையா
* தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் பி.ஜே.பி.யினர் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி.
– ஒன்றிய இணையமைச்சர்  எல்.முருகன்  குற்றச்சாட்டு
>>  அப்படியா, சமஸ்கிருத வாரம் கொண்டாடத் தெரிந்த பி.ஜே.பி. அரசு, ஹிந்தி மொழி கொண்டாட்டம் நடத்த தெரிந்த ஒன்றிய அரசு, தமிழ் மொழி கொண்டாட்டம் நடத்தாதது ஏன்? செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு, எட்டு ஆண்டுகளில் ரூ.1,488 கோடி. ஆனால், தமிழ் வளர்ச்சிக்கோ வெறும் ரூ.74 கோடி.
தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் பி.ஜே.பி.யினர் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *