முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முரசொலி செல்வம்’ படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைக்கிறார்!

1 Min Read

திராவிட இயக்க சிந்தனையாளர் முரசொலி செல்வம் அவர்கள் கடந்த 10–ஆம் தேதி அன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைவுற்றார். தமிழ்நாட்டின் – திராவிட இயக்கத்தின் போர்வாள் – ‘முரசொலி’ சார்பில் முரசொலி செல்வம்அவர்களின் படத்திறப்பும் – புகழஞ்சலியும் வருகிற 21.10.2024 மாலை 5 மணிக்கு – சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடை பெறுகின்றது.

நிகழ்ச்சிக்கு தி.மு.கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை வகிக்கிறார். முரசொலி செல்வம் அவர்களின் படத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைக்கிறார். தி.மு. கழக பொதுச் செயலாளர் – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘இந்து’என். ராம், புரட்சித் தமிழன் சத்தியராஜ், பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர்புகழுரையாற்றுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *