சென்னை, அக்.20- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலவரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கோரிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி காவல்துறை 23 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் விவரங்கள் ஊடகங் களில் விரிவாக வெளியாகியுள்ளது. அதில் ஆலந்துறை காவல் நிலையத்தில் நபர்களை காணவில்லை என்று பதிவான ஆறு வழக்கு களில் அய்ந்து வழக்குகள் விசாரணை கோப் புகள் மூடி கட்டி வைக்கப்பட்டு விட்டன. ஒரு வழக்கில் காணாமல் போனவரை இன்னும் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான ஏழு வழக்குகளில், அது தற்கொலையா? இயற்கைக்கு புறம்பான சாவா? என்று விசாரணை நடந்து வருகிறது. தடய அறிவியல் பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்து விசாரணை நிலுவையில் இருக் கிறது என்பது உட்பட பல விவரங்கள் தெரி விக்கப்பட்டுள்ளன.
இந்த ஆசிரமத்தில் தகன மேடை அமைக் கப்பட்டதும் அது தொடர்பான வழக்கு ஒன்று இருப்பதாகவும் விசாரணை அறிக்கை கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். இந்த தகன மேடையில் எவ்வளவு பேரின் உடல் எரிக்கப்பட்டிருக்கும் என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. இந்த நிலையில் 18.10.2024 அன்று உச்ச நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணையை முடித்து வைத்து, ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் தொடர்பான இதர வழக்குகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் விசாரிக்கவும், செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவுக்கும் தடையில்லை என தெளிவு படுத்தியுள்ளது.
இந்த குற்றவியல் வழக்குகளை விசாரிப்ப துடன் அதி நவீன கார்ப்பரேட் ஈஷா அறக் கட்டளை ஆசிரமம், பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் நிலங்களையும், அரசின் நிலங்களையும் ஆக்கிரமித்துள்ள புகார்கள் மீது அரசு தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்ற வினாவுக்கு வெளிப்படையான விடை அளிக்க வேண்டும்.
இரகசியங்கள் நிறைந்த தேசமாக விளங்கும் ஈஷா அறக்கட்டளை ஆசிரமத் தின் மீதான குற்றவியல் மற்றும் உரிமையியல் புகார்களை முழுமையாக விசாரித்து, உண்மை நிலவரத்தை நாட்டுக்கும், மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடு பட்டவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது. -இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.