பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்புக் கூட்டம் 12.10.2024 அனறு மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். புதுமை இலக்கிய தென்றல் அமைப்பின் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம் இணைப்புரை வழங்க, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் க.கார்த்திகேயன் தொடக்கவுரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையுரை நிகழ்த்த, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் “சிந்துவெளி நாகரிகம் ஆய்வறிக்கை நூற்றாண்டு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். திருவொற்றியூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கு.ஆசைத்தம்பி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் திரளான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
சிந்துவெளி நாகரிகம் ஆய்வறிக்கை நூற்றாண்டு பகுத்தறிவாளர் கழக சிறப்புக் கூட்டம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
