கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.7.2023

1 Min Read

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன என ஆய்வறிக்கை தகவல்.

* ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாஜக சார்பில் முதலமைச்சர்ர் வேட்பாளராக ஒருவரையும் முன்னிறுத்தவில்லை. உட்கட்சி பூசலே காரணம் என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.

* கடந்த மூன்று ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் காணவில்லை என உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல்.  இவர்கள் அனைவரும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியின் மவுனம் வெட்கக்கேடானது என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் விளாசல்.

* தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அது இரு திராவிடக் கட்சிகள் இடையே தான் என்கிறார் இ.பி.எஸ். அணி அதிமுக முனுசாமி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மணிப்பூரில் முன்னணியில் இருந்து வழி நடத்துவது ஏன் பிரதமர் மோடிக்கு கடினமாக இருக்கிறது? என மூத்த எழுத்தாளர் தல்வீன் சிங் கேள்வி.

தி டெலிகிராப்:

* கடந்த ஓராண்டில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது 35 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிக வரி விதித்து, மோடி அரசு ஆதாயம் தேடுகிறது என ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.

* மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு பிரதமர் மோடி வெளிநாட்டில் குடியேறுவார் என லாலு பிரசாத் பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *