இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய அரசு!

Viduthalai
2 Min Read

900 இந்திய ராணுவ வீரர்கள் உயிருக்கு ஆபத்து!

பெய்ரூட், அக். 18- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு அய்.நா. அமைதிப்படையில் பணி யாற்றும் 900 இந்திய ராணுவ வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், வீரர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு நட வடிக்கை எடுப்பதற்குப் பதில், இஸ்ரேலுடன் கைகோர்த்து நரேந்திர மோடி அரசு அப்பட்டமான துரோகத்தை இழைத்துள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள அய்.நா அமைதிப் படைகள் முகாமின் பிரதான வாயிலை 13.10.2024 அன்று இஸ்ரேல் ராணுவம் டாங்கிகள் கொண்டு அழித்ததாக லெபனானில் உள்ள அய்.நா. இடைக்காலப் படை (UNIFIL) தெரிவித்துள்ளது. மேலும் அய்.நா. படைகள் மீது தொடர்ந்து நான்காவது நாளாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவ வதாகவும் அது கூறியுள்ளது. இதில், 15-க்கும் மேற்பட்ட
அய்.நா. அமைதிப் படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
அய்.நா. இடைக்காலப் படை கவலை தெரிவித்துள்ளது.

“அய்.நா. நிலைகள்மீது தாக்கு தல் நடத்துவது என்பது பன்னாட்டு சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 (2006) ஆகியவற்றை அப்பட்டமாக மீறும் செயல்” எனவும் லெபனானில் உள்ள அய்.நா அமைதிப் படைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
லெபனானில், பன்னாட்டு சட்டத்தை மீறி அய்.நா. அமைதிப் படை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அத்த கைய தாக்கு தல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனானில் அய்.நா. இடைக்காலப் படையில் பங்கு பெற்றுள்ள நாடுகள் கூட்ட றிக்கை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, சீனா, பிரான்ஸ், அர்மீனியா, இலங்கை உள்ளிட்ட 34 நாடுகள் இணைந்து கையொப்ப மிட்டு, இந்த கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. ஆனால், அய்.நா. அமைதிப் படையில் இந்திய ராணுவ வீரர்கள் 900 பேர் வரை பணியாற்றும் நிலையில், இந்திய அரசு கையெழுத்திடவில்லை.
பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்கள் இந்த தாக்கு தலை கண்டித்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்காமல் தவிர்த்திருப்பதன் மூலம், இந்திய வீரர்களை பாஜக அரசு கைவிட்டு விட்டதாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு நடை முறையில் இந்தியா தரும் ஆதரவு இது எனவும், எல்லை கடந்து அய்.நா. பாதுகாப்பு படையில் பணியாற்றும் இந்திய வீரர்களுக்கு செய்த துரோகம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காசாவில் அய்.நா. படை யில் பணியாற்றி வந்த இந்தியா வின் ராணுவ வீரர் கர்னல் வைபவ் அனில் காலே, 5 மாதங்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். பன்னாட்டு சட்டத்தை மீறிய இப்போர்க் குற்றத்திற்காக இந்திய பிரதமர் மோடி, அப்போதும் இஸ்ரேல் அரசுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. இந்திய வீரரை படுகொலை செய்ததற்காக இஸ்ரேல் ராணுவத்தின் மீது பன்னாட்டு நீதி மன்றத்தில் ஒரு வழக்குக் கூட பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *