சென்னை அய்.அய்.டி.யில் சிறப்பு எம்.பி.ஏ. படிப்பு

1 Min Read

சென்னை, அக். 18- சிறப்பு எம்.பி.ஏ. படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை அய்அய்டி அறிவித்துள்ளது.
அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அப்பணியில் இருந்துகொண்டே எம்பிஏ படிக்கும் வகையில், 2 ஆண்டு சிறப்பு எம்பிஏ(Executive MBA) படிப்பை சென்னைஅய்அய்டி வழங்கி வருகிறது. பணிச்சூழல் பாதிக்கப் படாத வகையில், ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அய்அய்டி வளாகத்தில் நேரடி வகுப்புகள் நடைபெறும். உலக அளவில் புகழ்பெற்றமேலாண்மை துறை பேராசிரியர்கள், தொழில் நிபுணர்கள் வகுப்பு எடுப்பார்கள்.

இந்நிலையில், வரும் ஆண்டில் சிறப்பு எம்பிஏ சேர்க்கைக்கான அறிவிப்பை அய்அய்டி வெளியிட்டுள்ளது.

இப்படிப்பில் சேர விரும்புவோர் https://doms.iitm.ac.in/admission என்ற இணையதளத்தில்அக்டோபர் 20ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி தேர்வு, நேர்காணல் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நவம்பர் 8, 9, 10ஆம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவு வெளியாகும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு 2025 ஜனவரியில் வகுப்புகள் தொடங்கும் என அய்அய்டி அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *