நீதித் துறை எங்கே செல்லுகிறது? மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ முழக்கமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாதாம்!

Viduthalai
1 Min Read

கருநாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு, அக்.17 மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிடுவது மத உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகாது என்று கருநாடக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கருநாடகாவின் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவு நேரத்தில் நுழைந்த இரண்டு நபர்கள் ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிட்டதாகவும், மத ரீதியாக அச்சுறுத்தம் வகையில் பேசியதாகவும் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மத உணர்வு களைப் புண்படுத்துதல், அத்து மீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மசூதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை வைத்து அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் குமார், சச்சன் குமார் என்ற இரு இளைஞர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.
தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு குற்றம்சாட் டப்பட்டவர்கள் தரப்பில் கருநா டக உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, “பிரிவு 295ஏ என்பது தீங்கிழைக்கும் நோக்கில் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், மத நம்பிக்கை களையும் வேண்டுமென்றே அவ மதிப்பதற்காக பதியப்படுவது. ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிடுவது எப்படி மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்று புரியவில்லை.

அந்த பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் நல்லி ணக்கத்துடன் வாழ்வதாக புகார்தாரரே தெரிவித்திருக்கும் நிலையில், இந்த நிகழ்வு மோதலை ஏற்படுத்தும் என்று கூறுவதில் உண்மை இருக்கமுடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், “295ஏ பிரிவின் கீழ் எந்தவொரு செயலும் குற்றமாக மாறாது என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. அமைதியைக் கொண்டுவருவதிலோ அல்லது பொது ஒழுங்கை சீர்குலைப்ப திலோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத் தாத செயல்கள் 295ஏ பிரிவின் கீழ் குற்றத்திற்கு வழிவகுக்காது. குற்றத்தின் மூலப்பொருளை கண்டறியாமல், மனு தாரர்களுக்கு எதிராக மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க அனுமதிப்பது ‘‘துஷ்பிரயோகம்’’ மற்றும் தவறான நீதிக்கு வழிவகுக்கும்” என்று நீதிபதி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *