மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை

1 Min Read

ஜெயக்கொண்டம், அக்.16 கராத்தே பாட வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பிரதீப்குமார், வெற்றிச்செல்வன், மற்றும் பிரனேஷ் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

ரோட்டரி கிளப், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் வீர விளையாட்டு கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டிகள் 13.10.2024 அன்று தஞ்சாவூர் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

இதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி வீரர் த.பிரதீப்குமார் ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த இவர் 35-40 கிலோ எடைப் பிரிவு சண்டைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், கட்டா போட்டியில் மூன்றாம் இடத்தையும், ஆறாம் வகுப்பைச் சேர்ந்த அ.வெற்றிச்செல்வன் 35-40 கிலோ எடை பிரிவு சண்டை போட்டிகளில் இரண்டாம் இடத்தையும், கட்டா போட்டியில் மூன்றாம் இடத்தையும், நான்காம் வகுப்பைச் சேர்ந்த
மு. பிரனேஷ் 21 – 25 கிலோ எடை பிரிவு சண்டை மற்றும் கட்டா போட்டியில் மூன் றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த கராத்தே மாஸ்டர் வினோத் ஆகியோர்களுக்கு பள்ளி முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *