ஒன்றிய ஆட்சியின் இலட்சணம்? “இந்திய எல்லையில் புதிய கிராமத்தையே உருவாக்கிய சீனா”

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, அக்.16 இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. இந்நிலையில் பாங்காங் ஏரி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள பாங்காங் ஏரியின் குறுக்கே பாலத்தை சீனா கட்டி முடித்தது. இந்த பாலத்தில் சீன ராணுவ வாகனங்கள் பயணிப்பதாக சாட்டிலைட் ஆதாரங்கள் கிடைத்தன.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் ஒளிப்படம் ஒன்று எடுத்தது. அதன் மூலம் பாங்காங் ஏரியின் வடக்கே புதிய கிராமத்தையே சீனா உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கிராமம் எல்லையில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் மொத்தம் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கட்டடங்களிலும் 6 முதல் 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும்.

அதோடு இந்த பகுதியை சுற்றிய ராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை விரிவுப்படுத்தும் பணிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் சீனா மக்களை குடியேற்ற திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அவசியப்பட்டால் ராணுவத் தளமாகவும் சீனா இதை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. மொத்தமாக 17 எக்டேர் அளவுக்கு சீனாவினால் கட்டு மானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு சுமார் 4347 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *