வலியுறுத்துகிறார் கபில்சிபல்
புதுடில்லி, அக்.14- மின்னணு வாக்குப்ப திவு எந்திரங்கள் குறித்து காங்கிரஸ் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய் பதில் அளிக்க வேண்டும் என கபில்சிபல் வலி யுறுத்தி உள்ளார்.
அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வாக் குப்பதிவு எந்திரங்களில் பல் வேறு குளறுபடிகள் நடந்திருப் பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர் பாக விரிவான விசாரணை நடத்துமாறு கடந்த 9ஆம் தேதி தேர்தல் ஆணையில் கட் சியின் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதைத்தொ டர்ந்து மேலும் சில ஆதா ரங்களை திரட்டி கடந்த 11ஆம் தேதியும் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. குறிப்பாக 20 தொகுதி களில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கள் வாக்குப்பதிவு எந்திரங்க ளின் பேட்டரி திறன் குறித்து எழுத்துப்பூர்வ புகார்களை அளித்து உள்ளனர்.
ஆதாரங்கள் வழங்கியிருக்கிறது இவ்வாறு காங்கிரஸ் கட்சி எழுப்பியிருக்கும் சந்தேகங்க ளுக்கும், கேள்விகளுக்கும் தேர்தல் ஆணைய் விளக்கம் அளிக்க வேண்டும் என கட்சியின் முன் னாள் மூத்த தலைவரும், மாநி லங்களவை சுயேச்சை உறுப்பினருமான கபில்சிபல் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர் பாகஅவர் கூறியிருப்பதாவது:-
வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி எழுப்பியிருக்கும் கேள்விக ளுக்கு ஆதாரங்களையும் அந்த கட்சிதேர்தல் ஆணையில் வழங் கியிருக்கிறது. இது தொடர்பாக மேலும் அதிக விவரங்கள் எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களை தேர்தல் ஆணைய் தெளிவுபடுத்த வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரங்களை தவறாக பயன் படுத்துவது நடக் கிறது. ஆனால் எந்த அளவுக்கு இது நடக்கிறது என்பதை என் னால் கூற முடியாது.
நான் தொடக்கத்தில் இருந்தே வாக்குப்பதிவு எந் திரங்களை எதிர்க்கிறேன். கடந்த காலங்களில் இது தொடர்பாக பல அறிக்கை களை வெளியிட்டு இருக்கி றேன். ஒளிவுமறைவுக்கு இடமளிப்பதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு கபில்சிபல் கூறியுள்ளார்.