பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான அடுத்த சுற்று தயார் : ஜார்கண்ட், மகாராட்டிரத்துக்கு தேர்தல்

1 Min Read

புதுடில்லி, அக்.13 மகாராட்டிரம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவிருப்பதை முன்னிட்டு, மத்திய ஆயுதப் படைக் காவலர்களின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதுதான், அரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான அடுத்த சுற்று தயாராகிவிட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஜார்க்கண்ட் மாநில பாதுகாப்புப் பணிக்கு 100 தொழிற்படையினரை தேர்தல் ஆணையம் கோரியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது முதற்கட்ட பாதுகாப்புப் பணிக்காக மட்டுமே என்றும், தேர்தல் ஆணையம், மாநிலங்களின் பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டால், கூடுதலாக படைகள் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைக்கு மகாராட்டிர மாநிலத்துக்கு, முன்கூட்டியே படைகளை அனுப்புவது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்றாலும், மத்திய ஆயுதப் படை வீரர்கள் மாநிலத்துக்கு அனுப்பும் பணி தொடங்கிவிட்டதாகவும், ஏற்ெகனவே சிஏபிஎஃப் வீரர்கள் மாநிலத்திலேயே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராட்டிர மாநிலம் பரப்பளவில் பெரியது என்பதால், இரண்டு தவணைகளாக சிஏபிஎஃப் படையினர் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்பட்ட தாகக் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *