அலாகாபாத், அக்.13 ‘நாகரிகமான சமூகத்தில் இணையர்கள் பாலியல் தேவைகளை தன் இணையரிடம் அல்லாமல் வேறு எங்கு சென்று பூா்த்தி செய்துகொள்ள முடியும்’ எனக் கூறி, கணவருக்கு எதிராக மனைவி தொடுத்த வரதட்சிணை கொடுமை வழக்கை அலாகாபாத் உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி அனீஷ்குமாா், ‘இந்த வழக்கில் இணையரின் தாம்பத்ய உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே முதன்மை காரணங்களாக உள்ளன. இது இருவருக்கும் இடையேயான பாலியல் தேவைகள் தொடா்புடைய தனிப்பட்ட பிரச்சினையே தவிர, வரதட்சிணை கொடுமை சாா்ந்தது அல்ல. இதனால் கணவா் மற்றும் அவரது உறவினா்கள் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பொய்யான புகாரை மனைவி அளித்துள்ளாா்.
நாகரிகமான சமூகத்தில் பாலியல் தேவைகளை தன் இணையரிடத்தில் அல்லாமல் வேறு எங்கு சென்று பூா்த்தி செய்துகொள்ள முடியும்?. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எஃப்அய்ஆா்) வரதட்சிணை கொடுமை நிகழ்த்தப்பட்டதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை. எனவே, பிரஞ்சல் சுக்லா மற்றும் இருவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வரதட்சிணை கொடுமை வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டாா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரஞ்சல் சுக்லாவுடன் திருமணம் நடைபெற்றதாகவும், அதன்பிறகு பிரஞ்சல் சுக்லாவும் அவரது குடும்பத் தினரும் வரதட்சிணை கேட்டு கொடுமைப் படுத்தியதாகவும் அவருடைய மனைவி மீஷா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் பிரஞ்சல் சுக்லா உள்பட மூவா் மீது வரதட்சிணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.