– கருஞ்சட்டை –
பாரதீய ஜனதாவாகட்டும், ஆர்.எஸ்.எஸ். சங்கி களாகட்டும், ஆளுநர் ஆர்.என்.ரவியாகட்டும் – இவர்கள் எத்தகையவர்கள் – மனித மதிப்பு என்பதை எந்த அளவுக்குத் தரை மட்டத்தின்கீழ் ஆயிரம் ஆயிரம் அடிகளுக்கும் கீழ் புதைக்கக் கூடிய ‘புண்ணியவான்கள்(?)’ என்பதைப் புரிந்துகொள்ளலாம்!
‘ஸநாதனம்‘ என்பது வருணாசிரமமே என்று சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே சொன்ன பிறகு, இந்த ஈயம், பித்தளைகள், இரும்புக்குக் ‘கில்டு’ அடித்து தங்க வியாபாரம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?
இந்த 2024 ஆம் ஆண்டில் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனச் சிறுமியின் காலைக் கழுவிப் பூஜை செய்வது – அதேநேரத்தில், பார்ப்பனரல்லாதார் என்றால், சாக்லேட்டை தூர நின்று எறிவது – இதனைச் செய்பவர் ஒரு முதலமைச்சர் என்றால், இந்தக் கேடு கெட்ட ‘ஸநாதனத்தை‘ என்னவென்று சொல்லுவது!
பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் – அவர்கள் பார்ப்பனரல்லாதாராக இருந்தால், ‘ஊத்தைக்’ கண்ணைக் கழுவிவிட்டு, நிதர்சனமாகப் பார்க்கட்டும், படிக்கட்டும்!
கருப்புச் சட்டைக்காரர்கள் காரணம் இல்லாமல் எதையும் கூறுவதில்லை என்பதை உணரட்டும்!
உ.பி. சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத், பார்ப்பனச் சிறுமிக்குக் கால் கழுவி பூஜை செய்கிறார்!
பார்ப்பனரல்லாதவர்கள் என்றால், தூர நின்று சாக்லேட்டை எறிகிறார்
உ.பி. முதலமைச்சசர்