பா.ஜ.க. பயங்கரவாதிகளின் கட்சி – பிரதமர் மோடிக்கு கார்கே பதிலடி

1 Min Read

பெங்களூரு, அக்.13 பா.ஜ.க. பயங்கரவாதிகளின் கட்சி என்று கார்கே, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நகர்ப்புற நக்சல்களின் தாக்கம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறார்.
இதற்குக் கருநாடக மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடியின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்து பேசியுள்ளார். அவர் கூறும்போது,’ மோடி எப்போதும் காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல் கட்சி என்று விமர்சிக்கிறார். அது அவரது பழக்கம். ஆனால் அவரது கட்சி எப்பேர்ப்பட்டது? பா.ஜ.க. பயங்கரவாதிகளின் கட்சி; கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்ட மோடிக்கு உரிமையே கிடையாது’ என்று விமர்சித்திருந்தார்.

பா.ஜ.க.வை பயங்கரவாதிகளின் கட்சி என்று கார்கே விமர்சித்திருப்பது பா.ஜ.க.வினர் மத்தியில் கடும் கொந்த ளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *