மூடநம்பிக்கைக்கு பச்சிளம் குழந்தை பலி – பா.ஜ.க. ஆளும் உ.பி.யில்! ‘மந்திரவாதி’ பேச்சைக் கேட்டதால் நரபலி கொடுக்கப்பட்ட அவலம்

1 Min Read

முசாபர்நகர், அக்.11- பாஜக சாமியார் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் பச்சிளம் குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட அவலம் நடைபெற்றுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பெல்டாகிராமத்தை சேர்ந்தவர் கோபால் காஷ்யப். இவரது மனைவி மம்தா இந்த தம்பதிக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மம்தா சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கோபால்-மம்தா தம்பதி ஒரு மந்திரவாதியை அணுகி ஆலோசனை கேட்டுள்ளனர். அப்போது அந்த மந்திரவாதி, மம்தாவின் உடல் நிலை சரியாக வேண்டுமென்றால் அவரது குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதை அப்படியே நம்பிய கோபால்-மம்தா தம்பதி பிறந்து ஒரு மாதமே ஆன தங்களது பெண் குழந்தையை கொன்று. உடலை காட்டில் புதைத்தனர். குழந்தையை சில நாட்களாக காணவில்லை என அக் கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படை யில் கோபால்-மம்தா தம்பதியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *