முசாபர்நகர், அக்.11- பாஜக சாமியார் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் பச்சிளம் குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட அவலம் நடைபெற்றுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பெல்டாகிராமத்தை சேர்ந்தவர் கோபால் காஷ்யப். இவரது மனைவி மம்தா இந்த தம்பதிக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மம்தா சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கோபால்-மம்தா தம்பதி ஒரு மந்திரவாதியை அணுகி ஆலோசனை கேட்டுள்ளனர். அப்போது அந்த மந்திரவாதி, மம்தாவின் உடல் நிலை சரியாக வேண்டுமென்றால் அவரது குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதை அப்படியே நம்பிய கோபால்-மம்தா தம்பதி பிறந்து ஒரு மாதமே ஆன தங்களது பெண் குழந்தையை கொன்று. உடலை காட்டில் புதைத்தனர். குழந்தையை சில நாட்களாக காணவில்லை என அக் கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படை யில் கோபால்-மம்தா தம்பதியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.