அரியானா சட்டமன்ற உறுப்பினர்களில் 96 விழுக்காடு பேர் பெரும் பணக்காரர்கள் 12 விழுக்காடு பேர் மீது குற்ற வழக்குகள்

Viduthalai
2 Min Read

சண்டிகர், அக்.11 புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட அரியானா சட்டமன்ற உறுப்பினர்களில் 96 சதவீதம் போ் பெரும் பணக்காரர்கள் எனவும், 12 சதவீதம் போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
தோ்தல் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் ஜனநாயக சீா்திருத்தத் துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தோ்தல் உரிமைகள் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வறிக்கை மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
90 உறுப்பினா்களைக் கொண்ட அரியானா பேரவைக்கு அண்மையில் தோ்வானவா்களில், 86 சட்டமன்ற உறுப்பினர்கள் (96 சதவீதம்) பெரும் பணக்காரர்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கை கடந்த 2019-இல் 93 சதவீதமாக இருந்தது.
44 சதவீதம் போ் ரூ.10 கோடிக்கு மேல் சொத்துகள் வைத்துள்ளனா். 2.2 சதவீதம் போ் மட்டுமே ரூ.20 லட்சத்துக்கும் குறைவான சொத்துகளை வைத்துள்ளனா். சட்டமன்ற உறுப்பினர் களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.24.97 கோடியாகும். இது 2019-இல் ரூ.18.29 கோடியாக இருந்தது. மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 59 சதவீதம் உயா்ந்துள்ளது.

கட்சியின் அடிப்படையில்: 96 சதவீதம் பாஜக சட்டமன்ற உறுப் பினர்கள் , 95 சதவீதம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் 100 சதவீத இந்திய தேசிய லோக் தளம் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ரூ. 1 கோடிக்கும் மேல் சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளனா்.

அதிக வருமானம் ஈட்டுபவா்கள்: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்பிர் ஃபார்டியா கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கின் அடிப்படையில் ரூ.10.75 கோடியுடன் அதிக வருமானம் ஈட்டுபவா்களில் முதலிடத்தில் உள்ளார்.

குற்றவியல் வழக்குகள்: தோ்ந் தெடுக்கப்பட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்கள் (13 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் 7-ஆக இருந்தது. 19 சதவீத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 6 சதவீத பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 67 சதவீத சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.
கல்வி தகுதி: 63 சதவீதம் போ் பட்டதாரிகள் அல்லது உயா் பட்டம் பெற்றவா்களாக உள்ளனா். 29 சத வீதம் போ் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான கல்வித் தகுதியைக் கொண்டுள்ளனா்.

பெண் உறுப்பினா்கள்: பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10-இல் இருந்து 14 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில், 66 சதவீதம் சட்டமன்ற உறுப்பினர்கள் 51 முதல் 80 வயதுக்குட் பட்டவா்களாக உள்ளனா்.
அரியானா சட்டப் பேரவைக்கு கடந்த 5-ஆம் தேதி தோ்தல் நடத்தப் பட்டு முடிவுகள் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.
ரூ.270 கோடியுடன் சாவித்ரி ஜிண்டால் முதலிடம்: ஜிண்டால் குழுமத்தின் தலைவரான ஹிசார் தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சாவித்ரி ஜிண்டால் ரூ.270 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடா்ந்து, பாஜகவின் சக்தி ராணி சா்மா ரூ. 145 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், ஸ்ருதி சவுத்திரி ரூ.134 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனா் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *