கல்லூரி மாணவர்களை திரட்டி கருத்தரங்கம் நடத்தப்படும்: கலந்துரையாடலில் தீர்மானம்

1 Min Read

பட்டுக்கோட்டை, அக். 10- பட்டுக்கோட்டை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 28.09.2024 அன்று காலை 11 மணியளவில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மெரினா உணவக மேல் மாடியில் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் அத்திவெட்டி வீரையன், பொதுக்குழு உறுப்பினர் நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர் சோம.நீலகண்டன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இரத்தின சபாபதி, நகரத் தலைவர் சேகர், ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கூட்டத் தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரை யாற்றினார்.
கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களை திரட்டி கருத்தரங்கங்களை நடத்துவது மற்றும் வாயிற் கூட்டங்களை நடத்துவது எனவும், உண்மை இதழுக்கு சந்தாக்களை திரட்டுவது எனவும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் துண்டறிக்கை பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *