காரப்பட்டு, அக். 10- கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் திராவிடர் கழகம் சார்பில் அய்ம்பெரும் விழா – தந்தை பெரியார் 146- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 135- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91 – ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் “விடுதலை” மலர் வெளியீட்டு விழா – என அய்ம்பெரும் விழா திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்ட புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு பறை குழுவினரின் இசை முழங்கத்துடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழக இனமான கழகக் கொடி ஏற்றி, கழகப் பொதுக் கூட்டம் காரப்பட்டு புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் தமிழரின் பாரம்பாரியமான இசை – பறைஇசை முழக்கத்துடன் மிகுந்த எழுச்சியுடன் அய்ம்பெரும் பெருவிழா 6.10.2024 அன்று மாலை 5.00 மணிக்கு காரப்பட்டு கிராமத்தில் தருமபுரி மண்டல கழக மேனாள் தலைவர் பழ.வெங்கடாசலத்தின் மந்திரமா? தந்திரமா? என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மந்திரவாதிகள், சாமியார்களின் மோசடிகளையும், பித்தலாட்டங்களையும் எடுத்துக்கூறி பல் வேறு கலை நிகழ்ச்சிகளை அறிவியல் விளக் கத்துடன் செய்து காண்பித்து சிறப்பித்தார்.
காரப்பட்டு பேருந்து நிலையம் அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் இனமான கழகக் கொடியினை கிருட்டினகிரி மாவட்ட கழக மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி, கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் முன்னிலையில் “தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க” என்ற பெரும் எழுச்சி முழக்கத்துடன் ஏற்றி வைத்தார்.
அய்ம்பெரும் விழா கழகப் பொதுக் கூட்டத்திற்கு ஊற்றங்கரை ஒன்றிய கழகத் துணைத் தலைவர் காரப்பட்டு பலராம். இரமேசு தலைமை வகித்துப் பேசினார்.
தொழிலாளர் விடுதலை முன்னணி (டாஸ்மாக்) மாவட்டச் செயலாளர் சீ. அண்ணாமலை அனைவரையும் வரவேற் றுப் பேசினார். மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராசேசன் இணைப்புரை வழங்கினார்.
பொதுக் கூட்டத்திற்கு ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், கீழ்மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திமுக. கோ. மணிகண்டன், மேனாள் ஊராட்சி செயலாளர் திமுக ந. அருணகிரி, காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக. கோ.ரமாதேவி கோவிந்தன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக. வஜ்ரம் (எ) செல்வராஜ், விசிக. ஜெ.சுப்பிரமணி, காரப்பட்டு கிளைத் கழக தலைவர் அ. அருணகிரி, துணைத் தலைவர் பலராம். இரஜினி, கிளைக் கழக செயலாளர் நா.கோகுல், கழக வழக்குரைஞர் ந.செயசீலன், திட்ட ஒருங்கிணைப்பாளர் மகி. நிரஞ்சன், கழக இளைஞரணி ஆ.மோகன சென்றாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தந்தை பெரியார் 146 – ஆம் ஆண்டு பிறந்தநாள் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா “விடுதலை” மலர் வெளியீட்டு விழா – திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளரும் அரூர் கழக மாவட்ட ப.க. தலைவருமான ச.இராசேந்திரன் மலரினை வெளியிட்டு உரையாற்றினார். மலரினை ஊற்றங்கரை (இராசா மருந்தகம்) மருத்துவர் வெ.முகில் வாணன், மாவட்ட கழக மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி, திருப்பத்தூர் கழக மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன், கீழ் மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திமுக. கோ. மணிகண்டன் ஆகியோர் மலரினை பெற்றுக் கொண்டு பேசினர். மற்றும் தி.க., திமுக., அதிமுக., விசிக உள்ளிட்ட நிர்வாகிகள் பெரியார் பிறந்தநாள் “விடுதலை” ஆண்டு மலர் அய்ம்பது மலர்களை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டனர்.
அய்ம்பெரும் விழாவில் கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா. சரவணன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், நீதிக்கட்சி தலைவர்கள் பனகல் அரசர், சர்.பி.டி. தியாகராசன், கல்வி வள்ளல் கர்வீரர் காமராசர், அறிஞர் அண்ணா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நாட்டு மக்களுக்கு சமூகநீதிக்காக ஆற்றிய அரும்பெரும் பணிகளை எடுத்துக் கூறியும், உலக வரலாற்றில் தந்தை பெரியாரைப் போல் எந்த ஒரு தலைவரும் தான் கொண்ட கொள்கைக்காக தன் வாழ்நாள் முழுவதும் இறுதி மூச்சு அடங்கும் வரை தன் வாழ்வை அர்ப்பணித்த தலைவர் எவரும் இல்லை. ‘அனைத்தும் அனைவருக்கும்’ என்ற சமூகநீதிக்கான சமத்துவ சிந்தனையை வலியுறுத்தியவர், மனிதநேய உரிமைக்காகப் போராடியவர், நாட்டு மக்களுக்காகவே தன் வாழ்வே அர்ப்பணித்தவர் உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் திருப்பத்தூர் கே.சி.எ. சிற்றரசு, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டிணன், மாவட்ட ப.க. செயலாளர் க.வெங்கடேசன், திருப்பத்தூர் மாவட்ட கழகச் செயலாளர் பெ. கலைவாணன், பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் இராம. சகாதேவன், சே. ஜானகிராமன், சித.வீரமணி, சமூக ஆர்வலர் கதவணி கே.பி.மாணிக் கவுதமன், ஒன்றிய இளைஞரணி தலைவர் கோ.சரவணன், சென்னை இரவிந்திரன், அன்பழகன், மாணவர் கழக மத்தூர் ச.அகரன், திருப்பத்தூர் இராசேந்திரன், வி.சி.க. அறிவழகன், மு.வேலு, மு.இரவிவர்மா, கே.சி.பெருமான், மகளிரணி முருகம்மாள், காரப்பட்டு ப.கவிதா, இலட்சுமி, பெ.விண்ணரசி, ச.சாலா, அ.அட்சயா, ர.ரோகித், ர. நந்தினி, ர.பரணி, ர. தன்சீகா, ர. நவநீதம், ர. அலமேலு, ஊற்றங்கரை ப.க. வே.முருகேசன், துரைராஜ், காமாட்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சி.மோகன்ராஜ், மு.இராஜேஷ், கோ.முருகன், அ.திருமால், சி.தினேஷ், லோ.சீனிவாசன், கோ. வெங்கடேசன், தி.இராகேஷ்,கு. இராகுல், கு.நரேஷ் உள்ளிட்டவர்கள் குழுவாக கூட்டத்திற்கு வருகை தந்து பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்த காரப்பட்டு பலராம். இரமேசுக்கு பூமாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து சிறப்பித்தனர்.
காரப்பட்டு இளைஞர்கள், பெரியார் பற்றாளர்கள், கதவணி தோழர்கள் உள்பட அனைத்துக் கட்சி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக காரப்பட்டு பகுத்தறிவாளர் கழக கிளை செயலாளர் இரா.செந்தில் நன்றி கூறினார்.
தோழர்களுக்கு காரப்பட்டு கழகத் தோழர் கறி சோறு விருந்து ஏற்பாடு செய்து வழங்கினர்.
இந்த அய்ம்பெரும் விழாப் பொதுக் கூட்டத்தை மிகுந்த எழுச்சியுடன் கழகக் கொடி ஊர் முழுவதும் கட்டி வெகுசிறப்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து தனது முழு முயற்சியில் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்த ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக துணைத் தலைவர் காரப்பட்டு பலராம். இரமேசுக்கு கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பிலும், தலைமைக் கழகம் சார்பிலும் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன், மாவட்டத் தலைவர்
கோ. திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டி சிறப்பித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளை சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் காரப்பட்டு கிளை கழகம் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.