தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு அத்துமீறல் அதிகமாகிறது

1 Min Read

பெரம்பூர் பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் தொடங்கும் பாரதி சாலையில் பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து ஒரு பிள்ளையார் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதைவிடக் கொடுமை கோயில் சுவரில் அடிக்க வேண்டிய காவி நிற பட்டைக் கோடுகளை, பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் முழுவதும் அடித்துள்ளனர். இவ்வளவையும் செய்துவிட்டு, ஆலய நிர்மாணம் ஸ்தபதி திரு ஆர்.ரமேஷ்பாபு, கொளத்தூர், 98401 33146 என்று முகவரி மற்றும் தொடர்பு எண்ணையும் சுற்றுச்சுவரில் துணிச்சலுடன் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டியதே பெரும் குற்றம். இதில் பொது இடமான பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவரை கோயில் சுற்றுச்சுவராகக் கருதும்படி காவி வண்ணம் அடிக்கப்பட்டுள்ளதே. கேள்வி கேட்பார் இல்லையா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *