காஜியாபாத், அக்.10- வலதுசாரி அமைப்புகளின் போலிச் செய்தி களை அம்பலப்படுத்திய இணைய செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் மீது உ.பி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
வடமாநிலத்தைச் சேர்ந்த சாமியார் யதி நரசிம்மா னந்தின் கருத்துகள், இரு சமூ கத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும்படியும், வெறுப்பை பரப்பும் வகையில் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக போலிச் செய்திகளை சமூக வலைதளங்கள் மூலம் அம்பலப்படுத்தி வரும் ஏஎல்டி நியூஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் என்பவர், சாமியார் யதி நரசிம்மானந்த் தொடர்பான காட்சிப் பதிவை வெளியிட்டார். ஆனால், அந்தக் காட்சிப் பதிவில் யதி நரசிம்மானந்த் பேசியதை வெட்டித் திரித்து வெளியிட்டதாக உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் உள்ளூர் பா.ஜ.க. தலைவர் உதிதா தியாகி என்பவர், காஜியாபாத்தின் வெப் சிட்டி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படை யில் முகமது ஜுபைருக்கு எதிராக 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இவருடன் சேர்ந்து அந்தக் காட்சிப் பதிவைப் பகிர்ந்த அய்தராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி மற்றும் முஸ்லிம் மதகுரு அர்ஷத் மத்னி ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக உத்தரபிரதேச காவல்துறை முகமது ஜுபைர் மீது இதேபோன்ற வழக்கு ஒன்றை பதிவு செய்தது. அந்த வழக்கில் முகமது ஜுபைரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், உத்த ரப்பிரதேச காவல்துறையின் கைது நடவடிக்கை சட்டவிரோ தமானது என்பதைக் கண்ட றிந்த உச்சநீதிமன்றம், அவரை விடுவித்தது என்பது குறிப்பி டத்தக்கது.