சிதம்பரம், அக்.8- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் தமிழ்நாடு அரசால் ஒரு கோடியே 10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தலைமை வகித்தார். அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேரூராட்சி உறுப்பினர்கள் திமுக பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.