மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – 8ஆம் தேதி விவாதம்

2 Min Read

புதுடில்லி, ஆக. 2 – பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர் மானம் மீதான விவாதம் வரும் 8ஆம் தேதி தொடங்கும் என்றும், 10ஆ-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆ-ம் தேதி தொடங்கியது. இதில் மணிப் பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 26-ஆம் தேதி மக்களவையில் ஒன் றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் தாக்கீது வழங்கினார்.

26 எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி சார்பில் வழங் கப்பட்டுள்ள இந்த தாக்கீதை ஏற் றுக் கொண்ட மக்களவைத் தலை வர் ஓம் பிர்லா, இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர் மானம் மீதான விவாதம் வரும் 8ஆம் தேதி தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

இந்த விவாதம் 9ஆ-ம் தேதியும் தொடரும் என்றும் 10ஆ-ம் தேதி பிரதமர் மோடி விவா தத்துக்கு பதில் அளிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று (1.8.2023) நடைபெற்ற மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படு கிறது. மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. இதில் 5 இடங்கள் காலியாக உள்ளன. 

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணிக்கு 330 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இந்தியா கூட் டணி கட்சிகளின் பலம் 140க்கும் சற்று கூடுதலாக உள்ளது. மீதம் உள்ள 60-க்கும் மேற்பட்ட உறுப் பினர்கள் இந்த 2 கூட்டணியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்பது உறுதி. ஆனாலும், மணிப்பூர் விவகாரத் தில் பிரதமர் மோடியை மக்கள வையில் பேச வைப்பதற்காகவே இந்ததீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *