குழந்தைகளுக்கு எதிராக அய்ந்தாண்டுகளில் 1.1 லட்சம் குற்ற வழக்குகள் பதிவு!

Viduthalai
2 Min Read

முதல் நான்கு மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

புதுடில்லி,அக்.8-அய்ந்தாண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக 1.1 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் முதல் நான்கு மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களாகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் விவரம் வருமாறு:
அண்மைக்காலமாக, குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்திற்கு பெறப்பட்ட தரவுகளின்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 ஜூன் வரையிலான காலகட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 194 புகார்கள் தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் (என்சிபிசிஆர்) பெறப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு கிடைத்த பதிலில் 2019 ஆம் ஆண்டு 37 ஆயிரத்து 973 புகார்கள் பெறப்பட்டன.

2020 இல் கோவிட் தொற்று பரவிய காலத்தில், 5,154 புகார்களும், 2021 இல் 5,249 புகார்களும், 2022 இல் 4,243 புகார்களும் பெறப்பட்டன. 2023 இல், ஆணையத்திற்கு வந்த புகார்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை காட்டிலும் 10 மடங்கு அதிகரித்து 41,746 ஆக இருந்தது. 2024 ஜூன் 30 வரை என்சிபிசிஆர் இல் 57,496 புகார்கள் நிலுவையில் இருந்தன. அதே சமயம் 2019 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு ஆணையத்தில் 2,797 புகார்கள் நிலுவையில் இருந்தன. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர் சுபாஷ் தாக்கல் செய்த தகவல் உரிமை அறியும் மனுவுக்கு கிடைத்த பதிலில் இந்த அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 2019 ஏப்ரல் மற்றும் 2023 ஆகஸ்ட் மாதத்திற்கு இடையில் குழந்தைகள் உதவி எண் 1098 மூலம் ஒரு புகார் கூட வரவில்லை. அதைத் தொடர்ந்து சைல்ட் லைன் இந்தியா அறக்கட்டளையிலிருந்து சைல்ட் ஹெல்ப்லைன் எண். 1098 திரும்பப் பெறப்பட்டு மாநிலங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்கூறிய அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அதிக எண்ணிக்கையிலான அதாவது 31,354 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு வகைகளில் இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பானவை. இந்தக் காலகட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 11,602 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இம்மாநி லம் அகில இந்திய அளவில் 2 ஆவது இடத்தில் உள்ளது. 10,884 வழக்குகளுடன் உத்தரப்பிரதேசம் மூன்றாவது இடத்திலும், 10,369 வழக்குகளுடன் ராஜஸ்தான் நான்கா வது இடத்திலும் உள்ளன.
இவை தவிர, தமிழ்நாட்டில் 5,855, ஒடிசாவில் 4,955, ஜார்க்கண்டில் 3,696, கருநாடகாவில் 3,275, குஜராத்தில் 3,220, டில்லியில் 2,846, அசாமில் 2,609, பீகாரில் 2,409, அரியானாவில் 2,3171 வழக்குகள் இந்த கால கட்டத்தில் பதிவாகியுள்ளன. முதல் நான்கு இடங்களை பெற்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது குறிப்பி டத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *