வைரத்தொழில் பெரும் சரிவு – 50க்கும் மேற்பட்டோர் தற்கொலை மோடியின் குஜராத்தில் ஏற்பட்டுள்ள பேரவலம்!

1 Min Read

சூரத், அக்.8- இந்தியாவின் வைரத் தொழிலில் நிலவும் கடுமையான நெருக்கடியால் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களால் பாதிக்கப்படும் வைரத் தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரத் தொழிலில் தொழில் செய்து வருகின்றனர்.

சூரத்தில் மட்டும் 8,00,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள தாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்தது.
ஆனால், பல்வேறு உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்களால் உந்தப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக வைரத் தொழில் தற்போது குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்து வருகிறது.

இதனால், வைரத் தொழிலாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வேலையின்மையால் தவித்து வருகின்றனர். அவர்களுக்கான ஊதியங்கள் 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை குறைக்கப் பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் சிலர் கூறுகின்றனர். இந்த ஆபத்தான போக்கு, இந்தத் துறையை பாதிக்கும் மோசமான நிலைமைகளாகவும், பல கைவினைஞர்களை விரக்திக்கு தள்ளுகிறது என்றும் வைரத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் கூறுகிறது.
இதுகுறித்து, குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பாவேஷ் டாங்க் கூறுவதாவது, கடந்த 6 மாதங்களில் நிதி நெருக்கடி காரணமாக 60-க்கும் மேற்பட்ட வைரக் கைவினை ஞர்கள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர்.

அவர்களின் குடும்பங்கள் மோசமான நிலையில் இருந்த போதிலும், அவர்கள் அனுபவித்த துயரங்களை அரசோ அல்லது தொழில்துறையோ ஒப்புக் கொள்ள வில்லை என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *