வைரத்தொழில் பெரும் சரிவு – 50க்கும் மேற்பட்டோர் தற்கொலை மோடியின் குஜராத்தில் ஏற்பட்டுள்ள பேரவலம்!

viduthalai
1 Min Read

சூரத், அக்.8- இந்தியாவின் வைரத் தொழிலில் நிலவும் கடுமையான நெருக்கடியால் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களால் பாதிக்கப்படும் வைரத் தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரத் தொழிலில் தொழில் செய்து வருகின்றனர்.

சூரத்தில் மட்டும் 8,00,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள தாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்தது.
ஆனால், பல்வேறு உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்களால் உந்தப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக வைரத் தொழில் தற்போது குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்து வருகிறது.

இதனால், வைரத் தொழிலாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வேலையின்மையால் தவித்து வருகின்றனர். அவர்களுக்கான ஊதியங்கள் 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை குறைக்கப் பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் சிலர் கூறுகின்றனர். இந்த ஆபத்தான போக்கு, இந்தத் துறையை பாதிக்கும் மோசமான நிலைமைகளாகவும், பல கைவினைஞர்களை விரக்திக்கு தள்ளுகிறது என்றும் வைரத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் கூறுகிறது.
இதுகுறித்து, குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பாவேஷ் டாங்க் கூறுவதாவது, கடந்த 6 மாதங்களில் நிதி நெருக்கடி காரணமாக 60-க்கும் மேற்பட்ட வைரக் கைவினை ஞர்கள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர்.

அவர்களின் குடும்பங்கள் மோசமான நிலையில் இருந்த போதிலும், அவர்கள் அனுபவித்த துயரங்களை அரசோ அல்லது தொழில்துறையோ ஒப்புக் கொள்ள வில்லை என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *