கொல்கத்தா, அக். 7- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளி அதிகாரிகள், துர்கா பூஜையை முன்னிட்டு, சிறைக் கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை நாள்களிலாவது தங்களுக்கு நல்ல சாப்பாடு வழங்குமாறு சிறைக் கைதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு, பிரிஞ்சி மற்றும் மேற்கு வங்கத்தின் பாரம்பரிய உணவு களை சிறைக் கைதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதி காரிகள் கூறியுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் அனைவருக்கும், அக்டோபர் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மதிய மற்றும் இரவு உணவுகள் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விழா நாள்களிலாவது நல்ல உணவு வழங்க வேண்டும் என்று சிறைக் கைதிகளிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய உணவு வகைக ளால், அவர்களது முகங்களில் மகிழ்ச்சியை பார்க்க முடியும் என நம்புகிறோம். அவர்களுக்காக எடுக்கப்படும் இந்த மாற்றம் நல்லதாக அமையும் என நம்புவதாகவும் அதிகாரிகள் குறிப் பிட்டுள்ளனர்.
மட்டன் பிரியாணி மட்டுமல் லாமல், மீன் இறைச்சியுடன் மலபார் ஸ்பினாச், மீன் இறைச்சி மற்றும் பருப்புக் கடையல், பூரி – கொண்டைக்கடலை, சிக்கன் தொக்கு, பாஸ்மதி அரிசியில் செய்த புலாவ் வகைகளும் ஒவ் வொரு நாளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலால் உணவு சாப்பிடுபவர் களுக்கும், இறைச்சியில்லா பிரியர்களுக்கும் தனித்தனியாக உணவுகள் சமைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பத்துக்கு ஏற்ப பரிமாறப்பட விருக்கிறதாம்.
மோடி நவராத்திரி விரத நாட்களில் புலால் உணவு சாப்பிட்டு இந்துக்களின் நம்பிக் கையை சீண்டிப் பார்க்கிறார்கள் என்று கூறினார்.
அதே போல் உச்சநீதிமன்ற உணவகத்தில் நவராத்திரி 9 நாளும் புலால் உணவு மற்றும் இஞ்சி பூண்டு வெங்காயம் தவிர்த்த உணவு வழகக்ப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் சிறையிலேயே பலதரப்பட்ட புலால் உணவு அதுவும் நவராத்திரி நாட்களில் வழங்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.