அகமதாபாத், அக்.7- சோம்நாத் கோவிலைச் சுற்றி நடந்திருக்கும் இந்த இடிப்பு வழக்கு உயர்நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
தர்காக்கள் மற்றும் கல்லறைகள் குறித்து, அவுலியா-இ-தின் கமிட்டி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தற்போதைய நிலையைத் தொடரக் கோரியது.
இந்த அமைப்பின் சார்பில் சாகிப் அன்சாரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அவரது வழக்குரைஞர் மிரால் தாக்கூர், கட்டுமானம் பொது இடத்தில் இருந்தாலோ, நீதிமன்ற உத்தரவு இருந்தாலோதான் இடிக்கப்பட முடியும் என்று நீதிமன்றத்தில், தெரிவித்தார்.
ஆனால், 1951-ஆம் ஆண்டு அப்போதைய சவுராஷ்டிரா அரசின் அறிவிப்பின்படி இந்த நிலம் பொது நிலமாக அறிவிக்கப்பட்டது என்று மறுபுறம் இருந்த அரசு வழக்குரைஞர் கூறினார்.
தர்காவைச் சுற்றியிருந்த சிறிய அறைகள், விருந்தினர் மாளிகைகளுக்கு தான் தாக்கீது அனுப்பப்பட்டதாகவும், தர்காவை இடிக்க முடியாது என்றும் வழக்குரைஞர் மிரால் தாக்கூர் வாதிட்டார்.
ஹாஜி மங்ரோலி வழிபாட்டுத்தலம் மற்றும் கல்லறை இடிப்பு தொடர்பாக எந்த ஓர் ஆவணமும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றார்.
மாவட்ட நிர்வாகம் கட்டடத்தை இடித்துள்ள நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இடிக்கப்பட்ட கட்டடத்தைச் சுற்றி சுவரெழுப்ப அரசு அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள போதிலும், வேலி அமைக்கப்பட்டு நிலம் அரசாங்கத்தின் வசம் உள்ளதாக அரசு தரப்பு வழக் குரைஞர் தெரிவித்தார்.