தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

1 Min Read

சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் 3 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப் பித்த நிலையில் ஒரு லட்சம் பேருக்கு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மகளிர் உரிமைத் தொகை மற்றும் நாடாளு மன்ற தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களால் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி தகுதியான வர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையில் பரிசீலனையில் உள்ளவர்களுக்கும் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ விரைவில் வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

கடந்த மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அமைச்சர் அர.சக்கரபாணி ஒரு பேட்டியில் புதிய குடும்ப அட்டைக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்தால் 15 நாட்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் கூடுதலாக மக்களுக்கு கோதுமை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புதிய குடும்ப அட்டைக்கு காத்திருப்போர் உடனடி யாக விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *