குடியாத்தம், அக். 5- குடியாத்தம் புவனேஸ்வரிப் பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இருபெரும் விழாவாக செப் 15 (15.9.2024) அறிஞர் அண்ணா 116 ஆம் பிறந்த நாள் மற்றும் செப் 17 தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா(17.9.2024) நடைபெற்றது.
இவ்விழாவை பள்ளி யின் செயலாளர் எஸ்.ரம்யா கண்ணன் தலைமை யேற்று நடத்தினார்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் முதல்வர் ஆர் மேகலா வரவேற்றார். பள்ளியின் தாளாளர் வி.சடகோபன் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பற்றியும் அறிஞர் அண்ணா பற்றியும் நல்லதொரு சிறப்புரை நல்கினார். மேலும் இவ்விழாவினை பள்ளியின் துணை முதல்வர்கள் ஆர்.ராஜ குமாரி மற்றும் எம்.எஸ்.ராஜ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
பள்ளியின் தமிழ் ஆசிரியர் ச.திருமலை விழாவினை தொகுத்து வழங்கினார். மாணவ மாணவியரின் பெரியார் மற்றும் அண்ணா பற்றிய பேச்சுப் போட்டிகள், கவிதை வாசிப்புகள், பொன்மொழிகள், பெண் கல்வி பற்றிய பேசா ஒளிப்படம் ஆகியவை அரங்கேறின.
அதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதி யாக பள்ளியின் ஆசிரியர் பி.சர்மிளா நன்றியுரை கூற விழா நிறைவு பெற்றது.