கருநாடக முதலமைச்சர் சித்தராமையா
பெங்களுரு, அக்.5 நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருப்பதால், எப்போதும் வாய்மையே வெல்லும் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா மீதான மாற்றுநில முறைகேடு வழக்கு தொடா்பாக புகார் அளித்திருந்த சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா, பெங்களூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு 3.10.2024 அன்று வருகைதந்து முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளித்தார். மற்றொரு புகார்தாரரான எஸ்.பி.வினோத்குமார் கூறுகையில், ‘மாற்றுநிலமுறைகேடு தொடா்பான ஆதாரங்களை முதலமைச்சர் சித்தராமையாவும், மற்றவா்களும் அழித்து வருகிறார்கள்.‘ என்று குற்றம்சாட்டினார்.
இதனிடையே, மைசூரில் நடந்த தசரா தொடக்க விழாவில் பங்கேற்று, பேசிய மஜத சட்டமன்ற உறுப்பினர் ஜி.டி.தேவெகவுடா, ‘மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதலமைச்சர் சித்தராமையா எதிர்கொண்டுள்ள வழக்கு அவசியமற்றது. எதற்காக சித்தராமையா பதவி விலக வேண்டும்? 136 இடங்களில் வென்று முதலமைச்சராகி இருக்கும் சித்தராமையா எப்படி பதவி விலக முடியும்? எதற்காக அவா் பதவி விலக செய்ய வேண்டும்?‘ என்று பேசியிருந்தார். இதை தொடா்ந்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, ‘நான் எந்த தவறும் செய்யவில்லை.
ஒருவேளை தவறு செய்திருந்தால், இத்தனை ஆண்டுகள் அரசியலில் தாக்குப்பிடித்திருக்க முடியாது. கடந்தமுறையும் 5 ஆண்டுகள் நான் முதலமைச்சராக இருந்தேன்.
கருநாடக வரலாற்றில் தேவராஜ் அா்ஸுக்கு பிறகு 5 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தது நான் தான். மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் மஜத சட்டமன்ற உறுப்பினர் ஜி.டி.தெவேகவுடா, மாற்றுக்கட்சியில் இருந்தாலும் உண்மையை பேச முயன்றிருக்கிறார்.
நீதிமன்றங்கள் மற்றும் நீதிபரிபா லனத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. தோற்றுப்போன கட்சி 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் ஆட்சியை கவிழ்க்கும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.‘ என்றார் அவா்.