4.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல்: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. நிதி வழங்க ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு..பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
* சிறைச்சாலைகளில் ஜாதி அடிப்படையில் கைதிகளை பிரிக்கும் வழக்கம் சட்ட விரோதமானது – உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
* திராவிட மாடல் ஆட்சியில் 2021க்கு பிறகு தமிழ் நாட்டில் 46 புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு 1,40,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது, ஒன்றிய புள்ளிவிவர திட்டத் துறை தகவல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மராத்தி, பெங்காலி, அசாமிஸ், பாலி, பிராக்ருதி ஆகிய அய்ந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து, ஒன்றிய அமைச்சரவை முடிவு. (அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இன்னும் கொஞ்சம் மொழிகளுக்கும் தந்துவிட்டால், இந்தியாவில் எல்லா மொழிகளும் செம்மொழியாகும். செம்மொழி தமிழ் என்பதை பத்தோடு ஒன்று என ஒன்றுமில்லாமல் ஆக்கும் முயற்சி)
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரியானாவில் காங்கிரஸ் ‘புயல்’ வீசுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும், அன்பு விதைக்கப்படும் என ராகுல் சபதம்.
தி டெலிகிராப்:
* மோடியின் பிரச்சினைகள் உள்நாட்டில் உள்ளது; இவை பெரும்பாலும் தானே உருவாக்கியதால், வெளிநாட்டில் உள்ள க்யூரேட்டட் படங்கள் மற்றும் நடனக் கிளிப்புகள் ஆகியவற்றிலிருந்து இவற்றிற்கு பதில்கள் வராது என்கிறார் கட்டுரையாளர் சுசாந்த் சிங்.
– குடந்தை கருணா