கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், அக். 4 ‘நூற்றுக்க ணக்கானோர் உயிரிழந்த வய நாடு நிலச்சரிவு பேரிடரால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வு நட வடிக்கைகளுக்காக ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை’ என்று மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858.6 கோடி பேரிடா் நிதியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த 1.10.2024 அன்று விடுவித்தது.
மாநில பேரிடா் நிவாரண நிதியின் ஒன்றிய பங்காகவும், ஒன்றிய பேரிடா் நிவாரண நிதியின் முன்தொகையாகவும் விடுவிக்கப்பட்ட இந்த நிதியில் கேரளத்துக்கு ரூ.145.6 கோடி வழங்கப்பட்டது.
கேரளத்தின் வடக்கு மாவட்ட மான வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில்
400-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனா். இதையொட்டி, கேரளத்திற்குக் கூடுதல் நிதியை வழங்கவில்லை என்று முதல மைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரள அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன் மேலும் கூறுகையில், ‘வயநாடு நிலச்சரிவு நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக ஒன்றிய அரசு உறுதியளித்திருந்தது.
மாநில பேரிடா் நிவாரண நிதியில் ஒன்றியப் பங்கான ரூ.219.2 கோடியைக் கோரினோம். இதில் முதல் தவணையாக ரூ.145.6 கோடியை மட்டும் ஒன்றிய அரசு முன்னா் விடுவித்தது. 2-ஆவது தவணையாக அதே தொகையை ஒன்றிய அரசால் கடந்த 1.10.2024 அன்று விடுவிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறைதானே தவிர பேரிடா் நிவாரணத்தின் பகுதியாக உறுதியளிக்கப்பட்ட சிறப்பு நிதியுதவி அல்ல.
எனவே, இந்த விவகாரத்தை ஒன்றிய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, கூடுதல் நிதியைக் கோருவது என மாநில அமைச்சரவை நேற்று (3.10.2024) முடிவெடுத்துள்ளது.
நிவாரணம்
வயநாடு நிலச்சரிவில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த 6 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சமும், யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.
மாநில மகளிர் மற்றும் குழந்தை கள் நல மேம்பாட்டு துறை சார்பில் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்.
கருநாடகத்தின் ஷிரூரில் நிலச் சரிவில் உயிரிழந்த கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த அா்ஜூன் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் வழங்கப்படும்.
மறுவாழ்வு
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேப்பாடி மற்றும் கல்பேட்டா பகுதியில் மறுவாழ்வு குடியிருப்புகளைக் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள சட்ட பிரச்சினைகள் குறித்து சட்டநிபுணா்களுடன் ஆலோசனை நடத்தப்படும். வீடு, நிலங்களை இழந்த மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயநாடு நிலச்சரிவில் குடும்ப உறுப்பினா்கள் அனைவரையும் இழந்த இளம்பெண் சுருதி, பின்னா் நடந்த சாலை விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனையும் இழந்தார். இவருக்கு அரசுப் பணி வழங்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது’ என்றார்.