ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு பா.ஜ.க.வை கண்டித்து சென்னையில் விழிப்புணர்வு நடைப் பயணம்!

viduthalai
1 Min Read

சென்னை, அக். 3- ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜகவைக் கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று (2.10.2024) தேசிய விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெற்றது.

மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ்., பாஜகவை கண்டிக்கும் வகையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைப் பயணம் மேற்கொள் ளப்படும் என்று அறிவிக்கப்பட் டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா சாலை ஜிம் கானா கிளப் முகப்பி லுள்ள காமராஜர் சிலை யிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தியார் சிலை வரை நேற்று (2.10.2024) நடைப்பயணம் நடைபெற்றது.

பின்னர் செய்தி யாளர்களிடம் செல்வப் பெருந்தகை கூறியதாவது:

மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வன்முறை மற்றும் விஷமத் தனமான பேச்சுகளைத் தொடர்ந்தால் பாஜகவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை தமிழ் நாட்டில் இருந்து தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *