அக்டோபர் எட்டாம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

2 Min Read

சென்னை, அக். 2- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழ்நாடு அமைச்சரவை கடந்த மாதம் 28ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப் பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகிய 4 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். கடந்த 29ஆம் தேதி பதவியேற்ற இவர்கள், 30ஆம் தேதி தங்களது துறைகளில் பொறுப் பேற்றுக் கொண்டனர். இதில், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் முதல்முறையாக அமைச்சர் ஆகியுள்ளனர்.

இதுதவிர, க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், மெய்ய நாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 பேரின் துறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் விதமாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச் சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டா லினின் அமெரிக்க பயணத் தின்போது, ரூ.7,618 கோடி முதலீட்டில், 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து அமைச்சரவையில் விவாதித்து, ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சிறுபுனல் மின் உற்பத்தி உள்ளிட்ட சில கொள்கைகளுக்கு ஒப்பு தல் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த கூட்டத்திலும் தொழில் கொள்கைகள் குறித்து ஆலோசித்து ஒப்பு தல் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல் படுத்தப் பட்டு வரும் பல்வேறு நிதிசார்ந்த திட்டங்கள், அதற்கான நிதி ஆதாரம், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *