காரைக்குடி, அக். 1- செப்டம்பர் மாதம் முதல்நாள் ராஜஸ்தானின் அஜ்மீரில் சரக்கு ரயில் தடம் புரண்டது. தொடர்ந்து அன்றாடம் அப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் தடம்புரள்வது மற்றும் ரத்தாவது நாளொன்றுக்கு என செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் கடைசி நாளான நேற்று (30.9.2024) அதிகாலை மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.
சென்னை – காரைக்குடி இடையே 18 பெட்டிகளுடன் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் நேற்று (செப்.30) அதிகாலை 5.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.
பள்ளத்தூர் அருகே செட்டிநாடு பகுதியில் காலை 5.45 மணிக்கு சென்றபோது கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் திடீரென பிரேக் பைண்டிங் பழுதானதால் புகை வந்தது.
பாதுகாப்பு கருதி உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரயிலில் சென்னை வரவேண்டிய பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்
இதன் மூலம் ரயில் விபத்து மாதம் முழுவதும் நடந்து கொண்டிருப்பது மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.