செப்டம்பர் மாதத்தில் ரயில் விபத்துக்கள் இல்லாத நாளே இல்லை சாதனை படைத்த ரயில்வே அமைச்சர்

1 Min Read

காரைக்குடி, அக். 1- செப்டம்பர் மாதம் முதல்நாள் ராஜஸ்தானின் அஜ்மீரில் சரக்கு ரயில் தடம் புரண்டது. தொடர்ந்து அன்றாடம் அப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் தடம்புரள்வது மற்றும் ரத்தாவது நாளொன்றுக்கு என செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் கடைசி நாளான நேற்று (30.9.2024) அதிகாலை மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.
சென்னை – காரைக்குடி இடையே 18 பெட்டிகளுடன் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் நேற்று (செப்.30) அதிகாலை 5.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.

பள்ளத்தூர் அருகே செட்டிநாடு பகுதியில் காலை 5.45 மணிக்கு சென்றபோது கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் திடீரென பிரேக் பைண்டிங் பழுதானதால் புகை வந்தது.

பாதுகாப்பு கருதி உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரயிலில் சென்னை வரவேண்டிய பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்

இதன் மூலம் ரயில் விபத்து மாதம் முழுவதும் நடந்து கொண்டிருப்பது மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *